ஞாயிறு, 8 மார்ச், 2009

பிணங்களைக் காக்கவோ வருவர் ?

நினைவுகளோடு வாழும்
நிலமற்ற அகதிகள் நாங்கள்.
'நாளைய பொழுது நமக்கானது'
கனவுகள் பொய்த்துக்
காலிடை மிதியும்
பிணங்களை விலக்கி
உடலில் வழியும்
குருதியைத் துடைத்து
ஓடுதல் ஒதுங்குதல்
உயிர் வாழுதல் பற்றிய
ஏக்கமும் துயரும்....

கடற்கோள் கொள்ளையிட்ட
துயரைவிடக் கொடுமையிது
காப்பிடமற்ற விரிந்த வெளியில்
கூப்பிடவும் யாரும்
கேட்காத் தொலைவிருந்து
காத்திடுவர் தூதர்
கடலிடை வந்து மீட்டிடுவர்
என்றான நம்பிக்கையும்
களவு போய்
பிணங்களின் நடுவேயான கூக்குரலும்
குழந்தைகளின் கதறலும்
ஏழ்கடல் நுனிவரையும்
எங்களின் அழுகை....

எறிகணை துரத்தித் துரத்தி
எறிந்திருப்பது கடைசி முனை....
எங்களைப் பற்றி உலகம் பேசுகிறதாம்
எஞ்சிய மிச்சமும்
எறிகணை கொல்ல மிஞ்சிய
பிணங்களைக் காக்கவோ வருவர் ?
கடவுளர் எங்கே எங்களைக் காத்திடக்
கடல்தாண்டி நிற்கிறோமென்றவர்
நிலமைதான் என்ன ?

இனியொரு பொழுதிலும்
துளிர்விடா வண்ணமாய் - எம்
பொன்செளித்த நிலமெங்கும்
புதையுறும் கொல்லிகள்
நூறாண்டு போனாலும் ஆறாமல்
அடிவேரோடு தமிழ்ச்சாதியை
அகற்றிடும் மூச்சுடன்
ஆழப்புதைகின்றன உயிர்க்கொல்லிகள்.

பனி பூத்த வெளிகளில்
பாலைவனப் படர்வுகள்
பூப்பூத்த மரங்களின்
வேரின் தடயங்கள் அழிகின்றன.
இனியெந்த அகழ்வும்
இல்லையெனும்படியாய் யாவும்
இல்லாதொ(த)ழிக்கப்படுகின்றன.

இயற்கையின் பொழிவுகள்
கந்தகக்காற்றில் செத்து மடிகின்றன.
கிரோசிமாவின் மிச்சமாய் நாளை
பச்சையம் செத்து எம் பரம்பரை
வீரியமற்று சாகட்டுமென்றா
ஆரியர் துணையாய் இவ்வுலகு
ஆயுதம் களை
அகிம்சையைத் தரியென்கிறது...?

நம்ப வைச்சு கழுத்தறுத்த குள்ள நரி ....நீ!!

உலகத் தமிழினத் தலைவன்......நீ
எமக்காய் உயிரைவிட துணிந்தவன்....நீ
எமக்காய் பதவியை எறிந்திட துணிந்தவன்..... நீ
உலகத் தமிழினமே நம்பினோம் ...... ஐயா
தமிழனுக்கு விடிவுகாலம் பிறந்தது ......என்று


சரத் பொன்சேகா சொன்னான் .....அன்று
தமிழகத் தலைவர்கள் கோமாளிகள் ....என்று
தமிழகமே கொதித்து எழுந்தது ...அன்று
உங்களை நம்பினோர் எல்லோரும் கோமாளிகள் ...என்று
தமிழர்களுக்கும் தமிழின உணர்வாளர்க்கும் புரிந்தது....இன்று
நீங்கள் அன்று சொன்னது வெறும் கவிதை....என்று
கேவலம் சிங்களவனுக்கு புரிந்தது கூட நமக்கு புரியவில்லையே....அன்று.

உலகத் தமிழினத் துரோகி ....நீ
தமிழர்கள் உயிரை எடுப்பவன்....நீ
பதவி வெறி பிடித்தவன்... நீ
யாரை ஏமாற்ற ஊர்வலம் நடத்துகிறாய்...நாடகம்.
பதவியில் இருந்துகொண்டு ......நீ
ஈழத்தில் செத்து மடிகிறது தமிழினம்....நீயோ
உன் ஆட்சி போய்விடும் என்று தவிக்கிறாய் ....ஏனோ?
நம்ப வைச்சு கழுத்தறுக்கும் குள்ள நரி .... நீ!!

உனக்கு தெரிந்த மொழியில் என்னால் முடிந்தது....
புரிந்துவிடும் என்ற நம்பிக்கையோடு.........?

இனப்படு கொலையை தடுத்து நிறுதிடக் கூடிய இடத்திலிருப்பதால்
உன்னிடம் அழுது கேட்கிறது உலகத்தமிழினம்....!!
நினைத்தால் உன்னால் முடியும்..... ஆனால்
நினைக்க விடவில்லை உன் பதவி மோகம்
உலகத்தில் நடந்திராத பேரவலம் நடக்கிறது ஈழத்தில்
உனக்கோ சோனியாவின் அரவணைப்பு பாரதத்தில்....!!
இனியும் உன்னை நம்பிட ஏமாளிகளில்லை பாரினில்
எமைக்காத்திட தலைவன் இருக்கிறான் ..ஈழத்தில்.

அவரோடு தோள் கொடுத்திட தமிழின உணர்வாளர்களும்
உலகத் தமிழினமும் இருக்கிறது.....உலகத்தில்
நிச்சயம் வென்றிடுவொம் இந்தியாவின் சதியிலிருந்தும்
உலக வல்லரசுகளின் பிடியிலிருந்தும்.....
நம்பிக்கையோடு.......
உலகத்தமிழினமே திரண்டு எழுந்துவிடு ...உலகதில்
எமக்காய் நாம்தான் போராட வேண்டும்
இன்னும் போதாது உன் எழுர்ச்சி எழுந்துநில்
நிமிர்ந்து நில் இதுதான் உன் கடைசி மூச்சு