செவ்வாய், 15 ஜூன், 2010

அவளாகவே வந்தாள்



















அவளாகவே வந்தாள்
ஆயிரமாயிரம் கதைசொன்னாள்
அழுதாள்.. சிரித்தாள்...
நீயில்லாத நான் இல்லையென்றாள்,
நான் அலையும் திசையெங்கிலும்
அலைபேசியில் அழைத்தாள்..
யாரோடு சென்றாய் என்பாள்
எனைவிட்டு சென்றாய் என்றாள்...
அன்றும் அழைத்தாள்
எங்குவரஎன்றேன்..
ஆங்கிலேயக் கடைசொல்லி
அங்குவாவென்றாள்
சென்றேன் நான்
அறிமுகம் செய்தாள்
இவர்தான்
"நான் கட்டிக்கப்போறவர்"
என்னையல்ல
அருகிருந்தவனை எனக்கு.