வியாழன், 5 மார்ச், 2009

தமிழன் என்ற இனம்

என் இனத்தை
அலட்சியமாய்
என் நிறத்தை
அருவருப்பாய்
பார்க்கும் இந்நாட்டு
மக்கள்

பொன்னகை
மேனியில்
மின்னியபோதும்
கையில்
சுமையோடும்
நெஞ்சில்
வலியோடும்
புன்னகை தேடியலையும்
என் இனத்தமிழர்கள்

ஓய்வின்றி உறக்கமின்றி
இயந்திரமாய்
உழைத்த ஊதியத்தை
உறிஞ்சி எடுக்கும்
வரிகளின் வலிகள்

தமிழன் என்ற
இனம் உலகில்
இருப்பதை
எப்போதாவது
தீவிரவாதிகளாய்
ஞாபகப்படுத்திக்
கொள்ளும் ஊடகங்கள்

தமிழின உணர்வுகளை
வெளிப்படுத்திக்
கொண்டால்
சிறைப்பிடித்து
சித்திரவதை செய்யும்
சட்டதிட்டங்கள்

இப்படியாக என்
சந்தோஷவேர்கள்
அறுந்தபடி
வாழ்ந்திடும் நான்
இந்நாட்டில் அகதி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக