காலம் 
தூக்கி எறிந்தது 
தொலை தூரத்திற்கு 
வந்தவன் வந்தவன்தான் 
போக வழி தெரியவில்லை 
தொலைவு, மரணம்,துயரம் 
இவற்றோடு நெருங்கி விட்டேன்.. 
சிக்குண்ட மயிர் 
உயிரற்ற விழிகள் 
வாடிய முகமாய் 
அலைதலும் தொலைதலுமாய் 
கூவிக்கொண்டே ஓடுகிறது வாழ்க்கை... 
மொழி தெரிந்த 
ஒரு பட்டிணத்துக்குள் 
முகமூடி வாழ்க்கை... 
வாழ்விழந்த நாள் 
விலகும் என 
சகித்து கொண்டே 
வாழ்கிறது வாழ்க்கை.... 
கசியும் நீரை 
காரணம் சொல்லி நிறுத்த முடியவில்லை... 
இழப்புக்களின் துயரம் தாங்காமல் 
இதயம் வெடிக்கிறது, 
இழப்பிலும் பூத்து 
இறுதி ஊர்வலத்தில் வளர்கிறேன்.. 
இன்னொரு தேசத்தில்... 
"மறைவில் 
நொருங்குவதற்கு பதிலாய் 
கடலில் கரைந்திருக்கலாம் 
அலையாக எழுந்துவர......"
நரேந்திர மோடி பாடல்
2 ஆண்டுகள் முன்பு
 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக