என் இனத்தை 
அலட்சியமாய் 
என் நிறத்தை 
அருவருப்பாய் 
பார்க்கும் இந்நாட்டு 
மக்கள் 
பொன்னகை 
மேனியில் 
மின்னியபோதும் 
கையில் 
சுமையோடும் 
நெஞ்சில் 
வலியோடும் 
புன்னகை தேடியலையும் 
என் இனத்தமிழர்கள் 
ஓய்வின்றி உறக்கமின்றி 
இயந்திரமாய் 
உழைத்த ஊதியத்தை 
உறிஞ்சி எடுக்கும் 
வரிகளின் வலிகள் 
தமிழன் என்ற 
இனம் உலகில் 
இருப்பதை 
எப்போதாவது 
தீவிரவாதிகளாய் 
ஞாபகப்படுத்திக் 
கொள்ளும் ஊடகங்கள் 
தமிழின உணர்வுகளை 
வெளிப்படுத்திக் 
கொண்டால் 
சிறைப்பிடித்து 
சித்திரவதை செய்யும் 
சட்டதிட்டங்கள் 
இப்படியாக என் 
சந்தோஷவேர்கள் 
அறுந்தபடி 
வாழ்ந்திடும் நான் 
இந்நாட்டில் அகதி!
நரேந்திர மோடி பாடல்
2 ஆண்டுகள் முன்பு
 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக