தமிழா! 
எதிரி என்பவன் உன்னை குழி தோண்டி 
புதைத்தாலும் கலங்காதே 
தமிழா! 
தோண்டி புதைத்த அடிக்கல்தான் 
ஆயிரம் மாடிக்கு படிக்கல்.. 
உதிர்ந்துதான் போனாய் என்று 
ஏங்கி நீ விடாதே கண்ணீர் 
பள்ளத்தில் வீழ்கின்ற நீர்தான் 
பாய்ந்தோடும் ஆறாய் சேரும் 
வானத்து நீர் வீழ்ந்துதான் 
பெரு வெள்ளமாய் உலகையே மிரட்டும் 
நிலத்தில் வீழ்கின்ற விதையே 
பெரு விருட்சமாய் நிழல் தந்து நிற்கும் 
தோல்வியை கண்டதும் வீட்டுக்குள் ஒழிந்து 
சோகத்தில் உறங்கிட வேண்டாம். 
உறக்கத்தில் நீ இருந்தாலும் 
பறக்க விட்டு விடு உன் புத்தியை 
புதுமையை தேடு வாழ்வில் 
அதை கண்டதும் ஏங்கணும் பகைவர் 
தமிழா இரவும் பகலும் உண்டேல் 
அங்கு தோல்வியும் வெற்றியும் உண்டு 
பகைவரின் வெற்றியின் பின்னால் 
சில கயவர் நிச்சயம் இருப்பார் 
தோல்வியில் அனைவரும் 
அழுதால் அந்த கயவர் வெல்வார்கள் 
இரை தேடி தோற்ற புலி 
பசியாலே படுத்து செத்தது உண்டா.......? 
தோல்விக்கு பயந்தால் அது அடிமைக்கு வித்திடும் 
தோல்விகள் வருவதால் தாண்ட 
வெற்றியை தேடுகின்றனர் பல பேர் 
தோல்விகள் இல்லையென்றால் 
வெற்றியில் இனிமை ஏது.....?
தோல்வியில் துன்பம் கொண்டால் 
வெற்றியை சிந்திக்க நேரம் ஏது.....?
கல்வியில் தோல்விகள் வந்தால்
கற்றலில் முறையை மாற்று 
பயணத்தில் தோல்விகள் வந்தால் 
அந்த பயணத்தின் முறையை மாற்று 
ஆராட்சி தோல்வியில் இருந்தே 
இன்றைய விஞ்ஞானம் உருவாகி போச்சு
போரினில் தோல்விகள் கண்டே பல 
ஆயுதம் உருவாகி போச்சு
வெற்றிக்காய் நீ உழைத்தால் -அது உன்னை 
அரியாசனத்தில் இட்டு மகுடங்கள் சூட்டிடும் 
நுட்பமாய் சிந்தித்து வீரமாய் நீ எழு 
இரும்பே வளையும் இடியே முனகும் 
ஓடும் நீருக்கு தடை இட்டால் 
அது கூடி உரையே அழித்திடும் 
ஓடி உழைக்கும் உன்னை தடுத்தால் 
பகைவரின் தலைகள் தப்பாமல் உருளும் 
தோல்வியை தந்தவனை தோல்விக்குள் தள்ளி 
வெற்றியை அரவணைக்க தைரியமாய் நீ எழு 
வீழ்ச்சி நிலையில்லை அதன் தொடர்ச்சியே வெற்றி 
தமிழா நாளையே பெரு வெற்றி உன்னை வந்து சேரும் 
அது வரை காத்திரு ........
நரேந்திர மோடி பாடல்
2 ஆண்டுகள் முன்பு
 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக